சீன அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ், கொட்டாவ பகுதியில் கலைஞர்களுக்காகச் சிறப்பு வீட்டுத்திட்டம் ஒன்று நிர்மாணிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள தகுதியான கலைஞர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
தகுதியுடைய கலைஞர்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.culturaldept.gov.lk என்ற முகவரிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் *கலைஞர்கள் தொடர்பாடல் பிரிவில் நேரடியாகச் சென்று ஒப்படைக்கலாம். அல்லது தபால் மூலமாகவும் அனுப்பி வைக்க முடியும்.
தபாலில் விண்ணப்பங்களை அனுப்புபவர்கள், கடித உறையின் மேல் இடது பக்க மூலையில் *”சீன உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டம்” என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
இந்த வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 25 ஆகும்.
கலைத்துறையைச் சேர்ந்த தகுதியான அனைத்துக் கலைஞர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

