Home இலங்கைச் செய்திகள்அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

by Nabishad
0 comments

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பல வெளியேறும் இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும் இடம், வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை வெளியேறும் இடம், அத்துடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவு இடம் மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் இடம் ஆகிய பகுதிகளுக்கு அருகில் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடனும் கவனமாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment