News

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானப்படை ஹெலிகொப்டர்

விமானப்படைக்குச் சொந்தமான பெல்-412 ரக ஹெலிகொப்டர் இன்று (25) காலை ஹொரணையில் உள்ள தக்ஸிலா கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயிற்சிக்காக இன்று (25) காலை இரத்மலானை விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகொப்டர் சீரற்ற காலநிலை காரணமாக தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தரையிறங்கிய ஹெலிகொப்டர் சிறிது நேரம் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இரத்மலானை விமானப்படை தளத்திற்குத் திரும்பிசென்றது.

Related Articles

Back to top button