Sri Lanka News

மதுபானப் போத்தல்களின் ஸ்டிக்கர் குறித்து புதிய வெளிப்படுத்தல்

மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை அச்சிடுவதற்காகச் செய்யப்படும் செலவு, அவை டிஜிட்டல் முறையில் அச்சிடப்பட்ட போதிலும் குறையவில்லை என அரசாங்க நிதி பற்றிய குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு மதுபான மற்றும் பீர் நிறுவனங்களின் போத்தல்களில் இந்த பாதுகாப்பு ஸ்டிக்கரை ஒட்ட முடியாத காரணத்தினால், அது போத்தலிலேயே டிஜிட்டல் அச்சாக மேற்கொள்ளப்படுவதாகவும் அங்கு தெரியவந்துள்ளது. குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா:

“இப்போது இந்த ஸ்டிக்கர் பிரச்சினை. உற்பத்தி எவ்வாறு உள்ளது? எவ்வளவு கள்ளத்தனமாக விற்கப்படுகிறது என்பதே நமது கேள்வி.” சுங்கவரி பிரதி ஆணையாளர் எம். ஜயந்த சில்வா:

“ஸ்டிக்கர் வேலைத்திட்டம் 2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2027 ஜனவரி 2ஆம் திகதியுடன் தற்போதுள்ள நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவடைகிறது. புதிய டெண்டர் ஒன்றைக் கோருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் ஸ்டிக்கர்களை அச்சிட்டுத் தர வேண்டும்.

ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மதுபான உற்பத்தியாளர்களே செய்கிறார்கள். 1000 ஸ்டிக்கர்களுக்கு 5.99 டொலர்கள் செலுத்தப்படுகிறது.

துறைமுகக் கட்டணங்கள் மற்றும் தீர்வைக் கட்டணங்களுடன் சேர்த்து மொத்தம் 7.99 டொலர்கள் ஆகிறது. உள்நாட்டு நிறுவனங்கள் இரண்டில், ஒன்றின் உற்பத்தி வேகம் அதிகம் என்பதனாலும், மற்றைய நிறுவனத்தின் தயாரிப்புகள் குளிரூட்டப்பட்டு எடுக்கப்படுவதால் தண்ணீர் இருப்பதனாலும் காகித ஸ்டிக்கரை ஒட்ட முடியாது.

இதனால் அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் ஸ்டிக்கர் அச்சிடப்படுகிறது. 80% க்கும் அதிகமானவை டிஜிட்டல் முறையிலேயே உள்ளன. ஒட்டப்படுவதில்லை, டிஜிட்டல் மூலமே பதிக்கப்படுகிறது.”

Related Articles

Back to top button