அரச மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்

இந்தியாவின் தமிழக அரச மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ மூலம் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.
அரச சுகாதாரச் சேவைகள் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தவும், அரச மருத்துவமனைகளில் குழந்தைகளின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கு, அரச மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
இந்த புதிய திட்டத்திற்காக ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார்.




