Sri Lanka News

தொடர்ந்து அதிகரித்து செல்லும் மசகு எண்ணெய் விலை

ஈரானுக்கு எதிரான போர் தொடங்கி ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், இன்று (30) ஆசிய சந்தைகள் திறக்கப்பட்டபோது சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

ஒரு பீப்பாய் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 115.84 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது, இது 2.9% அதிகரிப்பாகும்.

கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்னர், ஒரு பீப்பாய் எண்ணெய் சுமார் 72 அமெரிக்க டொலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

கடந்த வாரம் மார்ச் 19 அன்று விலை 118 அமெரிக்க டொலராக உச்சம் தொட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை இது 112-க்கு சற்று குறைவாக இருந்தது.

இதன்படி, ஒரு பீப்பாய் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 2.9 சதவீதத்தினால் அதிகரித்து 115.84 டொலராகப் பதிவாகியுள்ளது.

போருக்கு முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய அதிகரிப்பு என்பதுடன், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button