Sri Lanka News

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படைக்கு 7,500 புதிய உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்!

பொலிஸ் திணைக்களம் மற்றும் STF ஆகியவற்றில் நிலவும் வெற்றிடங்களுக்காக 7,500 புதிய ஆரம்பநிலை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள்கள், விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்கள், உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் (சாரதிகள்) ஆகிய பதவிகளுக்காக இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை www.police.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று, ‘Join Us’ என்ற தெரிவின் ஊடாக அல்லது வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஒன்லைன் (Online) முறையில் மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 மே மாதம் 8 ஆம் திகதி.

இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் அல்லது மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர், பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை 071-8591925, 011-2505202 அல்லது 011-2552953 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button