நாவிதன்வெளி சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் நிகழ்வு.
✍️மஜீட். ARM
நாவிதன்வெளிப் பிரதேச சபையின் சுபமங்களா மண்டப அபிவிருத்திக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று 2025.08.07ம் திகதி இடம் பெற்றது.
மாகாண நன்கொடை அபிவிருத்தின் திட்டத்தின் கீழ் விருத்தி செய்யப்படும் இக்கலாசார மண்டபக் கட்டிடத்திற்கான அடிக்கல்லினை கெளரவ தவிசாளர் திரு. இ. ரூபசாந்தன் நட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி உதவியாளர் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கற்களை நட்டு வைத்தனர்.
திருமண வைபங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்படும் இம்மண்டபத்தின் விருந்துபசார நடவெடிக்கைக்கான புறம்பான வளாக மொன்றினை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ் அபிவிருத்திச் செயன்முறை இடம் பெறுகிறது.
கடந்த ஆண்டு LDSP வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவு செய்யப்பட்ட இச்சுபமங்களா கலாசார மண்டபமானது நாவிதன்வெளிப் பிரதேச சபையின் வருமான முதல்களுள் ஒன்றாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. “
