Sri Lanka News

ஹல்துமுல்லயில் அரசாங்கத்துக்கு சொந்தமான பைன் தோட்டத்தில் தீ பரவல்!

SOCIAL TV

பதுளை – ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான பைன் தோட்டத்தில் தீ பரவியுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ பரவல் புதன்கிழமை (16) ஏற்பட்டுள்ளதுடன் இருபது ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

ஹல்துமுல்ல பொலிஸார், வனவிலங்கு மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தீயை அணைக்க முயற்சித்தும், அப்பகுதியில் வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹல்துமுல்ல பொலிஸார், வனவிலங்கு மற்றும் வனத்துறை அதிகாரிகள் தியத்தலாவ இராணுவ தீயணைப்புப் படையினரின் உதவியை நாடினர்.

வல்ஹாபுதென்ன மஹவங்குவ பகுதியில் ஏற்பட்ட தீ பரவல், தற்போது கினிகத்கல பகுதிக்கும் பரவியுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

அப்பகுதிகளில் கடுமையான வறட்சி காரணமாக பதுளை மாவட்டத்தில் அண்மைய நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட பெரிய அளவிலான காட்டுத் தீ அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவை கடும் முயற்சிகளுக்குப் பின்னர் அணைக்கப்பட்டதாகவும் பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button