தமிழ்நாட்டின் பொறுப்பு டி.ஜி.பி-யாக வெங்கட்ராமன் நியமனம்

தமிழக காவல்துறையின் டி.ஜி.பி-யாக பணியாற்றிய சங்கர் ஜிவால் ஓய்வுபெற்ற நிலையில், தற்போது காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டி.ஜி.பி-யாக பணியாற்றிவரும் வெங்கட்ராமன் கூடுதல் பொறுப்பாக டி.ஜி.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையின் டி.ஜி.பி-யாக பணியாற்றிய சங்கர் ஜிவால் ஓய்வுபெற்ற நிலையில், தற்போது காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டி.ஜி.பி-யாக பணியாற்றிவரும் வெங்கட்ராமன் கூடுதல் பொறுப்பாக டி.ஜி.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றும் சங்கர் ஜிவால், தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை (31.08.2025) பணி ஓய்வு பெறுகிறார்கள். அதனால், இருவருக்கும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் வழியனுப்பு விழா வெள்ளிக்கிழமை (29.08.2025) நடைபெற்றது.
டி.ஜி.பி. பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சங்கர் ஜிவால், தமிழக காவல்துறையில் அவருடைய சிறப்பான பணியை பாராட்டும் விதமாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் செப்டம்பர் 1-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் புதிய பதவியை ஏற்கிறார்.
இந்நிலையில், தமிழக காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டி.ஜி.பி பணிபுரிந்துவரும் ஜி. வெங்கட்ராமன் தமிழகத்தின் புதிய சட்டம் – ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் டி.ஜி.பி. அலுவலகத்தில் வைத்து சங்கர் ஜிவால் தனது பொறுப்புகளை பொறுப்பு டி.ஜி.பி.யாக பதவியேற்கும் வெங்கடராமனிடம் ஒப்படைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறை வீட்டு வசதி நிறுவன இயக்குநர் டி.ஜி.பி சைலேஷ்குமார் யாதவ் ஐ.பி.எஸ் ஓய்வு பெற்றதால், புதிய இயக்குநராக டி.ஜி.பி வினித் வான்கடே நியமிக்கப்பட்டுள்ளார்