Sri Lanka News

சம்மாந்துறை S 24 கால்வாயை சுத்தம் செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை!

Social TV

அம்பாறை சம்மாந்துறை S 24 கால்வாயை சுத்தம் செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயத்தை அடிப்படையாக கொண்டு தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வரும் விவசாயிகளுக்கு S 24 கால்வாயில் குப்பைகளை கொட்டுவது பெரும் சவாலாக காணப்படுகிறது.

இக் கால்வாயின் ஊடாக நாவக்காடு வட்டை, மீனாச்சி அடி வட்டை மற்றும் செம்மண் வட்டை போன்ற வயல் நிலங்களுக்கு நீரினை கொண்டு செல்வதற்காகவே இக் கால்வாய் பயன்படுத்தப்படுகிறது.

குறித்த கால்வாயின் ஊடாக விவசாயத்திற்கு தேவையான நீர் வருகின்ற வேளைகளில் வீட்டுக் கழிவுகள் மற்றும் தோட்டக்கழிவுகள் போன்ற பல்வேறு கழிவுகள் நீரில் போடப்படுகிறது இதனால் விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் இப் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button