Sri Lanka News

🔴ஆளில்லா மர்மப் படகு வாழைச்சேனை துறைமுகத்தில்!

Social TV

இன்று , யாரும் இல்லாத நிலையில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு சிறிய படகு, வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 85 கிலோமீட்டர் (221 நாட்டிகல் மைல்) தொலைவில், நடுக் கடலில் இந்தப் படகு காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படகில் எவரும் இல்லாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

படகு யாருக்குச் சொந்தமானது, கடலில் அது எப்படி ஆளற்று மிதந்தது என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
தற்போது படகு வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துறைமுக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button