
திருநெல்வேலி கிழக்கு, சேர்ச் லேன் பகுதியில் பெரும் பரபரப்பு!
யாழ் திருநெல்வேலி கிழக்கு, சேர்ச் லேன் பகுதியில் வசிக்கும் ஓர் ஆட்டோ ஓட்டுநர், தனது வீட்டில் உள்ள 1000 லீற்றர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தாங்கி ஒன்றில் பெற்றோலை நிரப்பி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயலவர்கள் வழங்கிய தகவல்களின்படி, குறித்த நபர் கல்வியங்காடு மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்கு சென்று பெற்றோலை வாங்கி வந்து, அதனை இந்த பெரிய தண்ணீர் தாங்கியில் சேமித்து வைப்பதாகத் தெரியவந்துள்ளது.
இவ்வாறாக அதிகளவான பெற்றோலை பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைப்பது பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நெருக்கமான குடியிருப்புப் பகுதியில் இவ்வாறான நடவடிக்கைகள் பாரிய அனர்த்தங்களுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கோப்பாய் பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.