Sri Lanka News
ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தொலைபேசி மற்றும் வட்ஸ்எப் இலக்கங்களைப் பயன்படுத்தி, தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் மோசடிக் கும்பல் ஒன்று குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 0115 226 126 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து யாராவது அழைப்புகளை ஏற்படுத்தினால், அவர்களுக்குத் உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.




