Accident
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மோதி பாரிய விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில நேருக்கு நேர் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பம் இன்று (18) மதியம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர் கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.






