Sri Lanka News

இருக்கைப்பட்டி இன்று முதல் கட்டாயம் – மீறினால் அபராதம்!

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளில் இருக்கைப்பட்டி அணியாதவர்களுக்கு எதிராக இன்று முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.

இருக்கைப்பட்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த 3 மாத கால அவகாசம் கடந்த டிசம்பர் 24ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி வாகன சாரதிகள் மற்றும் பயணிக்கும் அனைவரும் இருக்கைப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாகன சாரதி மற்றும் முன் இருக்கையில் அமர்ந்து செல்லும் பயணி ஆகிய இருவருக்கும் இச்சட்டம் பொருந்தும்.

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் இந்த விதிமுறையை மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button