Accident

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழப்பு

பியகம, கெமுணு மாவத்தை பகுதியில் வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் நேற்று (09) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் முல்லேரியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தங்கியிருந்த அறைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிவதைக் கண்டு, அவர் அறையிலிருந்து வெளியில் வந்துள்ளார்.

இதன்போது முகத்தை மூடி மறைத்தவாறு வந்த இருவர் ஆயுதங்களால் அவரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொலையைச் செய்த சந்தேக நபர்களோ அல்லது கொலைக்கான காரணமோ இதுவரையில் கண்டறியப்படவில்லை.

உயிரிழந்தவரின் சடலம் முல்லேரியா வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button