Sri Lanka News

மீண்டும் வழமைக்குத் திரும்பிய கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள்

கடவுச்சீட்டு விநியோகம், ஒரு நாள் சேவை மற்றும் விசா நடைமுறைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கணினி அமைப்புகள் மீட்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில் கடவுச்சீட்டு விநியோகம், ஒரு நாள் சேவை மற்றும் விசா நடைமுறைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதால், ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவைகள் அனைத்தும் தற்போது இயங்குவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button