
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, மீண்டும் பொறுப்பேற்றுக் கட்டியெழுப்புமாறு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் 1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை மீளப்பெறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.