அஹ்மதி கவர்னரேட் பாதுகாப்பு இயக்குநரகத்தின் சார்பில், Fahaheel மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தப்பிக்க முடியாதபடியான சோதனை நடத்தப்பட்டன. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 79 பேர் பல்வேறு விதி மீறல்கள் காரணமாக கைது செய்யப்பட்டனர் மற்றும் 63 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன என்ற செய்தியை இன்று(18/08/26) சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கையின் விவரங்கள் பின்வருமாறு:
1) அடையாள ஆவணங்கள் இல்லாத 39 பேர்.
2) பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 29 பேர்
3) விசா மற்றும் வசிப்பிட அனுமதி காலாவதியான 5 பேர்
4) விதிமுறைகளை மீறிய 4 தெருவோர வியாபாரிகள்.
5) போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் தேடப்பட்ட ஒருவர்
6) போதை பொருள் பயன்படுத்தி அசாதாரண நிலையில் இருந்ததுடன், போதைப் பொருட்களையும் வைத்திருந்த ஒருவர் என்று 79 பேர் கைதாகியுள்ளனர். இந்த சோதனையில் 63 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. விதிமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அனைவரும் நாடுகடத்தல் உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் .

