News

சுற்றுலாத்துறையில் சாதனை இலங்கைக்கு படையெடுக்கும் இந்தியர்கள்

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எட்டு இலட்சத்தை கடந்துள்ளது.

அதன்படி, கடந்த 4 மாதங்களில் 809,595 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 68,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அதிகபட்சமாக 19,822 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button