News

சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சமுர்த்தி வங்கியின் தணிக்கைக்கான புதிய சட்டமூலம் அரசாங்கம் நடவடிக்கை

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சட்டமூலத்திற்கு அமைவாக, தேசிய தணிக்கைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சமுர்த்தி சமூக வங்கிகளின் கணக்குகளை தணிக்கை செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், சமுர்த்தி சமூக வங்கி சங்கங்களின் கணக்குகளை தணிக்கை செய்வதற்கும் தொடர்புடைய சட்டமூலத்தின் ஊடாக முன்மொழியப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிறகு சமுர்த்தி திருத்தச் சட்டம் என்று பெயரிடப்பட உள்ளது.

Related Articles

Back to top button