World News

அமெரிக்காவில் 10 கோடி பேருக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

அமெரிக்காவின் பல மாநிலங்களை கடுமையான வெப்ப அலை தாக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

டெக்சாஸ், மைனே, வட கரோலினா, வொஷிங்டன் டி.சி. உள்ளிட்ட பகுதிகளில் வெயில் தினந்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது.

வட கரோலினாவில் 113°F (45°C) மற்றும் வொஷிங்டனில் 109°F (43°C) வரை வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்கள் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது.

அதனால் சுமார் 10 கோடி அமெரிக்கர்கள் வெப்ப அலை காரணமாக பாதிக்கப்படலாம் என கணிக்கப்படுகிறது.

வெப்ப அலை ஜூலை 29ஆம் தேதி வரை நீடிக்கக்கூடும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும், உலர்ந்த நிலையில் நீர் பருகி உடலை குளிர்விக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button