மலேசிய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்! தூதுவர் தர்ஷன பெரேரா மற்றும் பதில் தூதுவர் முகமது ரிஸ்வி முக்கிய கலந்துரையாடல்!

இலங்கை – மலேசியா இடையிலான இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தர்ஷன எம். பெரேரா மற்றும் பதில் உயர்ஸ்தானிகர் முகமது ரிஸ்வி ஆகியோர் மலேசியாவின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் வை.பி. துவான் வொங் சென் அவர்களை மலேசிய நாடாளுமன்றத்தில் சந்தித்து சிறப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஜனநாயகம், பல்லின கலாச்சாரம் மற்றும் திறந்த பொருளாதாரக் கொள்கை போன்ற பொதுவான விழுமியங்களை மையமாக வைத்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக வாய்ப்புகளை அதிகரித்தல்.
புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல்.
இரு நாட்டு சுற்றுலாத்துறையையும் மேலும் மேம்படுத்தல்.
மலேசிய நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் வர்த்தகத்திற்கான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் தலைவராகவும் விளங்கும் வை.பி. வொங் சென் அவர்களுடன் நடத்தப்பட்ட இக்கலந்துரையாடல், இரு நாடுகளுக்கும் இடையே அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட உயர்மட்டத் தலைவர்களின் உத்தியோகபூர்வ விஜயங்களின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
இச்சந்திப்பின் போது மலேசிய நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடக்கலை மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகளையும் தூதுக்குழுவினர் பார்வையிட்டனர். இந்த சந்திப்பு இலங்கை – மலேசியா இடையிலான தூதரக மற்றும் பொருளாதார உறவில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது!
SriLankaMalaysia #BilateralRelations #TradeAndInvestment #Tourism #EmploymentOpportunities #SriLankaInMalaysia #MalaysiaParliament #DiplomaticEngagement #SriLanka #Malaysia #InternationalRelations #BreakingNews #SocialTV






