News

நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட மிதிகம சூட்டி

ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று (30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து இன்று அதிகாலை 4.27 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சலாம் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான OV-437 என்ற விமானம் மூலம் சந்தேகநபர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர், சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஓமான் பாதுகாப்புப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் ஓமானுக்குச் சென்ற நிலையில் சந்தேகநபரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button