Sri Lanka News

கொழும்பின் பல பகுதிகள் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்களாக அடையாளம்

கொழும்பில் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இராஜகிரிய – ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, வெல்லம்பிட்டி – கொலன்னாவ, பொரளை – வனாத்த முல்ல, மொரட்டுவை – லுனாவ, முகத்துவராம் – மட்டக்குளி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பல அரச நிறுவனங்கள் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

Related Articles

Back to top button