Sri Lanka News

பண்டிகைக்கால விசேட சுற்றிவளைப்புக்கள் தொடர்கின்றன

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள், நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பில் சுமார் 2,000 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தகவல் மற்றும் நுகர்வோர் விவகார பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்திற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை முன்னெடுக்கும் விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டத்தை ஏப்ரல் 30 வரை செயற்படுத்துகிறோம்.

குறிப்பாக விலைப் பட்டியலைக் காட்சிப்படுத்தாமை, பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், சந்தையில் நுகர்வோரை பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்குதல் மற்றும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுப்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை எமது அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏதேனும் நுகர்வோர் சந்தையில் அநீதி அல்லது பிரச்சினைகளை எதிர்கொண்டால், அலுவலக நேரங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துத் தகவல்களை வழங்க முடியும். அதற்கமைய அதிகாரிகள் தேவையான தலையீடுகளை மேற்கொள்வார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button