Sri Lanka News

கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்

குடும்பத் தகராறு முற்றியதில் கணவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்த 29 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளார்.

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிம்பொகுண பிரதேசத்தில் நேற்று (03) இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பலத்த காயமடைந்த நிலையில் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் அரலகங்வில, பிம்பொகுண பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவராவார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான கணவனைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button