World News

ஒரு லட்சம் பேர் பங்குப்பற்ற இருந்த இசை விழா மேடையொன்று பெல்ஜியத்தில் முழுமையாம தீப்பற்றி எரிந்துள்ளது.

பருவகாலத்தில் நடைபெறும் இசை பெருவிழா “டுமாரோலேண்ட்” (Tomorrowland) என்று அழைக்கப்படுகிறது இந்த நிகழ்வு பெல்ஜியத்தில் இடம்பெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (16) தீப்பற்றிய மேடையை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் மேடை முற்றாக சேதமடைந்துள்ளதுடன், நடைபெற இருந்த நிகழ்வு மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Related Articles

Back to top button