News

அணு கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க எச்சரிக்கை அமைப்பை நிறுவ நடவடிக்கை

அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை நிறுவ இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த முயற்சி சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

இந்த அமைப்புகள் தீவு முழுவதும் ஐந்து இடங்களில், முதன்மையாக கடற்படை தளங்களுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் அமுலாக்கப் பிரிவின் இயக்குனர் பிரகீத் கடதுன்ன தெரிவித்தார்.

அருகிலுள்ள நாடுகளில் உள்ள அணு மின் நிலையங்களில் ஏற்படும் இயற்கை அல்லது செயற்கை விபத்துகள் காரணமாக இலங்கைக்குள் நுழையக்கூடிய கதிர்வீச்சைக் கண்டறிய இந்த அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கற்பிட்டி, மன்னார், நெடுந்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் இந்த அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button