World News

ஹமாத் விமான நிலையத்தில் நடந்த சம்பவம் – பயணத்தின் நடுவே பிறந்த குழந்தை

அக்டோபர் 3 ஆம் திகதி, கத்தாரின் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இடைநிலையமாக (Transit) தங்கியிருந்த ஒரு இந்தியப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த மருத்துவக் குழுவினரும் அதிகாரிகளும் அவசர சிகிச்சை வழங்கி, குழந்தையை பாதுகாப்பாகப் பெற்றெடுக்க உதவினர்.

பின்னர், புதிதாகப் பிறந்த குழந்தையும் தாயும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அவர்களை இந்தியா திருப்பி அனுப்புவதற்காக தூதரகம் விரைவான நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மனிதாபிமான முயற்சியில் உதவிய புனர்ஜனி கத்தார் (Punarjani Qatar) மற்றும் குஜராத்தி சமாஜ் (Gujarati Samaj) அமைப்புகளுக்கு தூதரகம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button