News

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம் சபையில் சமர்பிக்கப்படும்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

நீதி அமைச்சினால் வரைவு செய்யப்பட்ட இந்த மசோதா, மறுஆய்வுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தற்போதைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியின்படி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி வழங்குவது ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button