பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணிசார்பில் குசல் மெண்டிஸ் 124 ஓட்டங்களையும், அணித் தலைவர் சரித் அசலங்க 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Taskin Ahmed மற்றும் Mehidy Hasan Miraz தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 286 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 39.4 ஓவர்கள் நிறைவில் 186 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Towhid Hridoy அதிகபட்சமாக 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில், Asitha Fernando மற்றும் Dushmantha Chameera தலா 03 விக்கெட்டுகளையும், Dunith Wellalage மற்றும் Wanindu Hasaranga தலா 02 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.