Accident

சாலை விபத்துக்களில் ஒரு வாரத்தில் 49 பேர் உயிரிழப்பு – அமைச்சர்

கடந்த ஒரு வாரத்தில் (ஏப்ரல் 4 முதல் 10 வரை) சாலை விபத்துக்களில் மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும், பொதுமக்கள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களை இலங்கை காவல்துறைக்கு தெரிவிக்க உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button