Sri Lanka News

143 ஆம் இலக்க தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில்!

ஹங்வெல்ல – கொழும்பு 143 ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக, கடுவலை – கொழும்பு பேருந்து ஊழியர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையிடம் ‘அத தெரண’ வினவியது.

அதன் தலைவர் காமினி ஜயசிங்க இது குறித்துக் தெரிவிக்கையில், பிரச்சினைக்கு காரணமான இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இன்று முற்பகல் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button