Sri Lanka News

பெண்களும் மைதானத்தை பயன்படுத்தும் உரிமை – திருமலையில் மகளீர் தினம்!

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு ஈவின்ங்ஸ் அமைப்பினால் “பெண்களும் மைதானத்தை பயன்படுத்தும் உரிமை ” என்ற கருப்பொருளில் நிகழ்வொன்று இன்று (10) இடம் பெற்றது.

வருடந்தோறும் கிராமமட்ட பெண்கள் அமைப்பிற்கிடையில் நடாத்தப்படும் வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இம்முறை 7 மகளீர் அணிகள் பங்குபெற்றின இதில் சோலையடி மகளீர் அணி வெற்றி கிண்ணத்தை வென்றனர்.

இந்நிகழ்வு E-wing ஸ்தாபகர் காயத்திரி நளினகாந்தன் தலமையில் நடைபெற்றது இதில் பிரதம அதிதிகளாக தி.பார்த்திபன் பிரதி கல்விப்பணிப்பாளர் பிரதம அதிதியாகவும் புவனேஸ்வர் கோட்டக் கல்வி அதிகாரி திருகோணமலை வலய மாநகர சபை உறுப்பினர் திருமதி ஜெனிட்டா மற்றும் அதிபர் தி.சென்.லூர்து அன்னை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம் அருட்சகோதரி யசோதா பொலிஸ்பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.என்.ஜெயமாலி சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button