Sri Lanka News

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நடந்த வீட்டுத் தொகுதி முறைகேடுகளை விசாரிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளது.

கோட்டாபய ராஜபக்க்ஷவின் நெருங்கிய சகா ஒருவரும் இவ்விடயம் தொடர்பாக கைதாகியுள்ளதால், இந்த விசாரணை பாரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அதிகாரத்தை பயன்படுத்திச் சட்டவிரோதமாக வீடுகளை ஒதுக்கீடு செய்த விவகாரமே விசாரணைக்கு வழிகோலியுள்ளது.

இந்நிலையில், நாளை (13) வௌ்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய விசாரணைக்கு முன்னிலையாகவுள்ளார்.

அவர் வழங்கும் வாக்குமூலங்களின் அடிப்படையில் அவருக்கு எதிதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

Related Articles

Back to top button