Sri Lanka News

மஹர, கம்பஹாவில் இன்று 15 மணித்தியால நீர்வெட்டு!

மஹர, கம்பஹாவில் இன்று 15 மணித்தியால நீர்வெட்டு!
மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்களில் இன்று (17) 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மத்திய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய நீர் குழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

இதன்படி, இன்று (17) மாலை 4.00 மணி முதல் நாளை (18) காலை 7.00 மணி வரை இப்பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Back to top button