Sri Lanka News

ஐஎம்எப் இன் 5வது, 6வது மதிப்பாய்வுகள் மே 27 இல்!

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், இலங்கை தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதியை குறித்துள்ளது.

நிறைவேற்றுக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்ட பின்னர், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான வழி திறக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த மதிப்பாய்வுகளுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு, பாதிக்கப்படக்கூடிய தரப்பினரைப் பாதுகாக்கும் அதேவேளையில், செலவுகளை ஈடுசெய்யக்கூடிய மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை நிர்ணய முறைகளை மீண்டும் நிலைநிறுத்துவது ஒரு முக்கியமான முன்நிபந்தனையாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐஎம்எஃப் செயற்குழு மே 27 அன்று இலங்கையின் கூட்டு மறுஆய்வுகளை பரிசீலிக்கவுள்ளதுசர்வதேச நாணய நிதியம் (IMF) தனது செயற்குழு இலங்கையின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மறுஆய்வுகள் குறித்து வரும் 2026 மே 27 அன்று தீர்மானிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த மறுஆய்வுக்கு ஐஎம்எஃப் செயற்குழு ஒப்புதல் அளித்தவுடன், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி கிடைக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button