Sri Lanka News

ஏர்பஸ் விசாரணை: மஹிந்த ராஜபக்ஷவுக்கு சம்மன்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு, Airbus விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு (CIABOC) அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் அதில், அவர் 2026 மே 12 ஆம் தேதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி விளக்கம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அழைப்புக் கடிதம் இன்று (மே 9) அவரது கார்ல்டன் இல்லத்திற்கு வழங்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கூறியுள்ளது.

கடந்த வாரம் சில ஊடகங்களில் மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானாலும், அப்போது அதிகாரப்பூர்வ கடிதம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம், Airbus ஒப்பந்த விசாரணையுடன் தொடர்புடைய முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் CEO கபில சந்திரசேனாவின் மரணத்துக்குப் பின் 24 மணி நேரத்திற்குள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button