World News

ஈரானின் புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ட்ரம்ப் அறிவிப்பு!

அயதுல்லா அலி காமேனியின் படுகொலையைத் தொடர்ந்து ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்கள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அதற்குத் தான் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ‘த அட்லாண்டிக்’ (The Atlantic) சஞ்சிகைக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரான் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட அந்நாட்டின் 48 முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளமையை அவர் சர்வதேச ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button