World News

கத்தாரில் அமெரிக்கர்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை: தூதரக சேவைகள் ரத்து

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கர்களை ஈரான் இலக்கு வைக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக, கத்தாரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது பணியாளர்களுக்கு ‘ஷெல்டர்-இன்-பிளேஸ்’ (Shelter-in-place) உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அமெரிக்கக் குடிமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கவும், மக்கள் கூடும் இடங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் சூழல் கருதி, மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும் வாரத்திற்கான அனைத்து வழக்கமான தூதரகச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நிலைமை சீரடைந்த பின்னரே தூதரகம் மீண்டும் இயங்கும். வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கர்கள் உள்ளூர் செய்திகளைக் கவனித்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Related Articles

Back to top button