Sports

இலங்கையின் தோல்வி குறித்து மெத்திவ்ஸ் ஆதங்கம்!

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் இங்கிலாந்து அணியுடன் நேற்று (22) இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியின் தோல்வியை அடுத்து, இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டத்தை அதன் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸூம் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் தமது எக்ஸ் கணக்கில் அவர் தெரிவித்துள்ளதாவது, சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை! இலங்கை அணியின் துடுப்பாட்டம் மிகப்பரிதாபம்.

பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் பொறுப்புடன் விளையாடி வெற்றியை ஈட்டித் தர முன்வரவில்லை. இது மிகவும் வேதனைக்குரியது! என தமது கவலையை அவர் வௌிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவும் தமது விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 51 ஓட்டங்களால் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button