Sri Lanka News
கல்முனை மேல்நீதிமன்றத்தில் எம்.ஐ.எம். உமர் அலி பிரசித்த நோத்தாரிசாக சத்தியப்பிரமாணம்

நிந்தவூரைச் சேர்ந்த சிரேஷ்ட தாதி உத்தியோகத்தரும் சட்டத்தரணியுமான எம்.ஐ.எம். உமர் அலி அவர்கள்,
இன்று 2026.02.05 திகதி
கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி கௌரவ ஏ. ஜுட்சன் அவர்களின் முன்னிலையில் பிரசித்த நோத்தாரிசாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்
இன்ஷா அல்லாஹ், சட்டத்தின் விழுமியங்களைப் பேணியும், நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் பொதுமக்களுக்கான தனது சட்ட சேவைகளை சிறப்பாக ஆரம்பிப்பார் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
இந்த முக்கியமான தருணத்தை முன்னிட்டு, Social TV ஊடகத்தின் சார்பாக
எம்.ஐ.எம். உமர் அலி அவர்களுக்கு
மனமார்ந்த வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன.
#socialtv #news #SriLanka




