Sri Lanka News

கைமீறிப் போகிறதா தேங்காய் விலை? ஏலத்தில் 122; கடையில் 200!

கடந்த இரண்டு வாரங்களில் சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது

தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.

இதனுடன் ஒப்பிடும்போது தாவர எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சந்தையில் தேங்காய்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காயின் விலை 122 – 124 ரூபாவரை இருந்த நிலையில், சில்லறை விற்பனையாளர்கள் ஒரு தேங்காயை 180 முதல் 200 ரூபா வரை விற்பனை செய்கின்றமை குறிபிபிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button