Sri Lanka News

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிகளில்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களின் முதியோர் உதவித்தொகை கொடுப்பனவு, இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக, அஸ்வெசும நலன்புரிச் சபை அறிவித்துள்ளது.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிக் குடும்பங்களில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவு வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு ஏற்கனவே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தகுதியுள்ள பயனாளிகள் இன்று (18) முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அஸ்வெசும நலன்புரிச் சபை அறிவித்துள்ளது.

‎   

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button