NewsSports

அம்பாறை மாவட்ட கிரிக்கெட் அணியை சந்தித்த றிஸ்லி முஸ்தபா..!

தேசிய இளைஞர் சேவை மன்றம் ஏற்பாடு செய்த கிரிக்கெட் போட்டிக்காக அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கிரிக்கெட் அணியை, கொழும்பு சாலிகா மைதானத்தில் இன்று றிஸ்லி முஸ்தபா அவர்கள் சந்தித்தார்.

இந்த சந்திப்பில், வீரர்களுடன் பொத்துவில் பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி அன்வர் அவர்களும் கலந்து கொண்டார்.

தொடரில் பல மாவட்ட அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய அம்பாறை அணி, துரதிர்ஷ்டவசமாக அரையிறுதியில் தோல்வியை சந்தித்தது. எனினும், அடுத்த கட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைப் பெறுவதற்காக றிஸ்லி முஸ்தபா அவர்கள் அணியினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

© M.M.U
மஜீட். ARM

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button