World News

கத்தார் வான்பரப்பில் ஊடுருவிய ஈரானிய போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன

கத்தார் வான்பரப்பில் ஊடுருவிய ஈரானிய போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன

கத்தார் நாட்டின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த ஈரானிய போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கத்தார் ஆயுதப் படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரானிலிருந்து வந்த இரண்டு SU24 ரக போர் விமானங்கள் கத்தார் எமிரி விமானப் படையால் (Qatar Emiri Air Force) சுட்டு வீழ்த்தப்பட்டன.வான் பாதுகாப்பு அமைப்புகளின் (Air Defenses) மூலம் 7 ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன.

விமானப்படை மற்றும் கடற்படையின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் 5 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

நாட்டின் இறையாண்மையையும் நிலப்பகுதியையும் பாதுகாக்க கத்தார் ஆயுதப் படைகள் முழுத் திறனுடன் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button