News
நல்லூர் கொடிச்சீலையில் இன்று காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை வடிவமைப்பாளர்களுக்கு பாரம்பரியக் காளாஞ்சி இன்று (21) காலை வழங்கப்பட்டுள்ளது.
நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு மாட்டுவண்டியில் எடுத்து செல்லப்பட்ட காளாஞ்சி, கலாச்சார மரபின்படி வழங்கப்பட்டது.
திருக்கல்யாணப் படிப்பும், பந்தற்கால் நாட்டுதலும் இன்று நடைபெற்றன. பெருந்திருவிழா வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.