News

க்ரீன் சிக்னல் – அமெரிக்க வரி விவகாரம் இரகசிய நிலையில்!

உலகளாவிய வர்த்தக சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை முன்னிட்டு, அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகள் தற்போது பல நாடுகளுடனும் விவாதிக்கப்படுகின்றன.

இதனைக் குறிப்பிட்டு அரசாங்கத்திற்குப் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வணிகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் வசந்த சமரசிங்க கருத்து தெரிவிக்கையில்;

“உலகின் 17 நாடுகள் அமெரிக்காவுடன் இந்த புதிய வரி விதிப்புகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன” எனத் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கிடையிலான 8 சுற்று பேச்சுவார்த்தைகள் இதுவரை நடைபெற்றுள்ளன.

இவை சில நல்ல முடிவுகளை எட்டும் வாய்ப்பு அதிகம் உள்ளது என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்ததாவது:

“இலங்கைக்கு இதுவரை பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தைகள் முடியும் வரை அந்த விவரங்களை வெளியிட முடியாது. இறுதியாக ஒரு ஒப்பந்தத்துக்கு வர இரு நாடுகளும் பாடுபடுகின்றன.”

இந்த பேச்சுவார்த்தைகள் மூலம், இலங்கை வெளிநாட்டு வர்த்தக பாதிப்புகளிலிருந்து விடுபடக்கூடிய, அல்லது குறைந்தபட்சத்தில் பாதுகாக்கப்படக்கூடிய ஒரு நிலையை நோக்கி நகர்கிறது என்பதே அரசாங்கத்தின் நம்பிக்கை.

Related Articles

Back to top button