
மத்திய காசாவில் உள்ள நகர் ஒன்றில், ஹமாஸ் காவல் பிரிவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 18 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது, ஹமாஸ் காவல் படையின் உறுப்பினர்கள் மீது இஸ்ரேலிய ட்ரோன்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் நடத்தும் உள்துறை அமைச்சகம் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளது.
இஸ்ரேல் “பொது ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, காவல் பிரிவுக்கு எதிராக ஒரு புதிய குற்றத்தைச் செய்துள்ளதாக, பாலஸ்தீன உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது